சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Admin / 23-08-2021 05:04:57pm
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 விசாரணையில் ஜெயராஜின் உறவினர்  ஜெய்சிங்ராஜா 2வது நாளாக சாட்சியங்கள் அளித்தார்.

ஏற்கனவே இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி மற்றும் மகள் சாட்சியம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9பேர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

Tags :

Share via