அதிகவேகமாக வந்த கார் மோதி போலீஸ் பலி!

by Admin / 28-08-2021 12:59:43pm
அதிகவேகமாக வந்த கார் மோதி போலீஸ் பலி!

சென்னை காவல் துறையில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் என்பவர் பணி முடித்து தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் மரணமடைந்தார்.
 
சென்னையில் அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை காவல் துறையில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் என்பவர் பணி முடித்து தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் மரணமடைந்தார்.
 
சென்னையில் பணிபுரியும் காவலர் மனோஜ்குமார் தனது பணி முடித்து  இருசக்கர வாகனத்தில் சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் வழியாக சுமார் 10 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஃபோர்டு எண்டோவர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அருகிலிருந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்தவர்கள் 108 க்காக காத்திராமல் தங்களது காரில் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்து சென்று சோதனை செய்ய காவலர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 உயிரிழந்த மனோஜ்குமாரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது. கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுனரான மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இன்டீரியர் டெக்ரேசன் வேலை பார்த்து வரக்கூடிய திருஞானசம்பந்தம்(47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via