இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது: பிரதமர் மோடி

by 1tamilnews செய்திகள் / 29-08-2021 05:50:25pm
இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது: பிரதமர் மோடி



மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கிராமங்களில் தொடர்ச்சியாக அதிக போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந்திய  பிரதமர்  நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று உரையாற்றினார்.

அப்போது ‘‘நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.  இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலமே இந்தியா பல உச்சங்களை அடைய முடியும்’’ என்றார்.

 

Tags :

Share via