உள்ளாட்சி தேர்தல்: எதிராக அதிமுக வழக்கு

by Editor / 17-09-2021 06:47:58pm
உள்ளாட்சி தேர்தல்: எதிராக அதிமுக வழக்கு

இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதிமுக தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தக்கூடாது. 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது, கள்ள ஓட்டு போடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும். இந்த தேர்தலில் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். செப்.,14 ல் தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி அளித்த மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via