சசிகலா: அக்.,16ல் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்

by Editor / 08-10-2021 10:18:44am
சசிகலா: அக்.,16ல் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்

அ.தி.மு.க., தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்' என்று கூறி வந்த சசிகலா, வரும், 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார். விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர். அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்தார். அதன்படி, 16ம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் ராமாபுரம் தோட்டத்திற்கு செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via