உடல் ஆரோக்கியமாக இருக்க ​பெருஞ்சீரக பால்:

by Editor / 23-10-2021 07:27:50pm
உடல் ஆரோக்கியமாக இருக்க ​பெருஞ்சீரக பால்:

பலருக்கு ஆரோகியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் என்ன சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை. அது மட்டும் இல்லாமல், உடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு நமது சமயலறையில் இருக்கும் பொருள்களை வைத்து எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


பெருஞ்சீரக விதைகளில் நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. பெருஞ்சீரக விதைகளில் விட்டமின் சி என்ற சத்து காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது உடல் மெட்டா பாலிசம், செல்லுலார் பாதுகாப்பு, எலும்பு வளர்ச்சி, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, காயங்கள் ஆற்ற போன்ற பலவற்றிற்கு இது உதவுகிறது.


​பெருஞ்சீரக பால்:
தேவையான பொருட்கள் : 1/2 டேபிள் பெருஞ்சீரக விதைகள்
1 கிளாஸ் பால்
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 1/2 டீ ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து கொள்ளுங்கள். அதை இப்பொழுது சூடாக்குங்கள். இப்பொழுது பெருஞ்சீரக பால் தயார் ஆகிவிட்டது இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சுவைக்கேற்ப பரிமாறுங்கள்.
பெருஞ்சீரக விதைப் பால் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது பெருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இரைப்பை நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்க செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும். எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. பெருஞ்சீரக விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.


இரும்புச் சத்து குறைப்பாட்டால் ஏற்படும் இரத்த சோகை குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது நம்முடைய இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. அனிமியா போன்ற இரத்த சோகை பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. கண் பார்வையை மேம்படுத்துகிறது. கண் பார்வைக் குறைபாடு அல்லது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு கிளாஸ் பெருஞ்சீரக விதைப் பாலை தினமும் எடுத்துக் கொண்டு வரலாம். இது உங்க கண்களில் வளரும் கண் புரையை போக்க உதவுகிறது.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரக விதைகளில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது நம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆகும். பெருஞ்சீரக விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் ஆன்டி பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், பருக்களை தடுக்கவும் உதவுகிறது. பெருஞ்சீரக விதை பாலை குடித்து வந்தால் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதோடு பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை களைய முடியும்.


மருத்துவரின் கூற்றுப்படி சாப்பாட்டுக்கு முன் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள். பெருஞ்சீரக விதைகளில் பாலிபினோல் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய்கள், உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது. சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. சுவாச பிரச்சினைகளான ஆஸ்துமா போன்றவற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

 

Tags :

Share via