நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை...

by Editor / 30-10-2021 07:06:07pm
நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை...

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளளார்.

தற்போது இருவரும் இறந்த நிலையில், வேலாயுதத்தின் மருமகள் விமலா, ராமமூர்த்தியின் மகன் ரவி மற்றும் மருமகள் ரேணுகாவிடம் தனது மாமனாருக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

ஆனால் ரேணுகா நிலத்தை கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
 
இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரை, ஒருவரை கத்தியால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் கத்தியால் குத்தியதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவி அவருடைய மனைவி ரேணுகா மற்றும் அவருடைய சகோதரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories