மேலப்பாளையத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.

by Editor / 01-11-2022 10:42:01am
மேலப்பாளையத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.

அன்சருல்லா என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டிய விவகாரத்தில் 2019 ல்இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.அதன் பின் என்.ஐ.ஏ போலீஸார் மேலப்பாளையத்தில் கடந்த 2019ல் சோதனை நடத்தினர். 

பின்னர் அவருடன் அரபு நாட்டில் பணி செய்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மற்றும் மூவர் வீடுகளிலும் என் ஐ ஏ சோதனை நடத்தப்பட்டது.

கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக தமிழகம் முழுவதும் போலீசார் உசார் நிலையில் இருக்க அறிவுறுத்திய அதன் அடிப்படையில் சந்தேகத்துகிடமான வகையில் செயல்பட்ட நபர்கள் மற்றும் என் ஐ  ஏ போலீசார் சோதனை நடத்தியவர்கள் இல்லங்களில் மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் இதுவரை இருவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஒரே நாளில் இன்றைய தினம் 4 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags : nia

Share via