ஆயிரம் ஏக்கர் வாழை தோட்டங்களில் வெள்ள நீர் புகுந்தது.
தூத்துக்குடிமாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் கனமழை காரணமாக
தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பி 24 கண் மதகு வழியாக நீர் திறந்து விடப்படுவதால் அத்திமரப்பட்டி, கலங்கரை, செல்லும் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது,சாலையை இணைக்கும் பாலத்தின் இரண்டு புறங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இதேபோல் அத்திமரப்பட்டி கலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் வாழை தோட்டங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வாழைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :