பாராளுமன்றத்தேர்தல் பணிகளை துவக்கிறது அதிமுக 

by Editor / 10-03-2023 02:17:45pm
பாராளுமன்றத்தேர்தல் பணிகளை துவக்கிறது அதிமுக 

பாராளுமன்றத்தேர்தல் காலம் நெருங்கிவருவதால் அதற்கான ஆயத்தபணிகளை அதிமுகவினர் தொடங்கியுள்ளனர்.இதன் முன்னோட்டமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி  தலைமையில் நேற்று சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை நகர.ஒன்றிய,பேரூர்,உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தும் வண்ணம் அதற்கான நிர்வாகிகள் கூட்டங்களை தமிழகமெங்கும் அதிமுகவினர் முன்னெடுக்கத்தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 
தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டம், தென்காசி மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் செங்கோட்டையில் நடைபெற்றது.கழக மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், அதிமுக சார்பு அணிகளின்  செயலாளர்கள் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

 

Tags :

Share via