மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த திமுக எம்.பிக்கள்

by Editor / 22-12-2021 01:08:24pm
மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த திமுக எம்.பிக்கள்

 இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள  
 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் திமுக எம்.பி-கள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு, “இந்திய தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அடித்து துன்புறுத்துவதும், மீன் வளங்களை அபகரிப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும் போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இதுவரை 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்; இவர்கள் உரிய நேரத்தில் திரும்புவார்களா? என்ற நிலை உள்ளது. அதனால் அனைத்து திமுக உறுப்பினர்களும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து விடுதலை செய்ய இலங்கை அரசை வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via