பச்சை நண்டை கடித்து விழுங்கியவருக்கு நேர்ந்த விபரீதம்
சீனாவின் ஜெஜியாங் நகரில் வசித்து வருபவர் லூ. இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் வளர்க்க வேண்டி, இரண்டு நண்டுகள் வாங்கியுள்ளார். இதில், ஒரு நண்டு அவர் மகளைக் கடித்தது. இதனால் வலியால் கதறிய மகளின் அழுகுரல் கேட்ட லூ, ஓடி வந்து, கோபத்துடன், அந்த நண்டை அப்படியே கடித்து,விழுங்கியுள்ளார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோதுதான், நண்டை பச்சையாக கடித்ததால் அவரின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 3 வித பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதிலிருந்து குணம்பெற அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :