கனிமொழி கருணாநிதி ஊக்கத்தால் தூத்துக்குடி மாணவி தங்கம்,வெள்ளி பதக்கங்களை பெற்றார்.

by Editor / 26-12-2021 03:48:17pm
கனிமொழி கருணாநிதி ஊக்கத்தால் தூத்துக்குடி மாணவி  தங்கம்,வெள்ளி பதக்கங்களை  பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த செ.சேசையா -தாயம்மாள் வின் மூத்த மகள் செல்வி ஸ்ரீமதி 24.12.2021 அன்று ராஜஸ்தானில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 73வது அகில இந்திய அளவிலான நேஷனல் மிதிவண்டி சாம்பியன்ஷிப் போட்டியில்,  முதல்நாள் போட்டியில் தங்கப்பதக்கமும் இரண்டாம் நாள் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்று ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முப்புலிவெட்டி கிராமத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். இவர் படைத்த சாதனைக்கு இந்த நிமிடம் வரை உதவி செய்து கொண்டிருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதிக்கும்,  முப்புலிவெட்டி கிராம மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துஉள்ளனர்.மேலும் மாணவி ஸ்ரீமதி  இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டி கிராமத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இவர் டெல்லியில் உள்ள சாய் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.

கனிமொழி கருணாநிதி ஊக்கத்தால் தூத்துக்குடி மாணவி  தங்கம்,வெள்ளி பதக்கங்களை  பெற்றார்.
 

Tags :

Share via