சாலையை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து சிக்கி தவித்து 16 மாணவர்கள் மீட்பு

by Editor / 23-07-2022 01:03:35pm
சாலையை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய  பள்ளி பேருந்து சிக்கி தவித்து 16 மாணவர்கள் மீட்பு

 தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய  பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.16 மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து நரசிமூலா பேட்  மண்டல பகுதியில் எச்சரிக்கைகளை மீறி வெள்ளத்தில் மூழ்கிய சாலையை கடக்க முயன்றபோது சிக்கிக்கொண்டது .தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via