தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 31-12-2021 05:41:50pm
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதே போன்று புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

 

Tags :

Share via