5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

by Admin / 04-01-2022 01:16:45pm
5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக திகார் சிறை நிர்வாக அதிகாரி தெரிவிக்கும்போது கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் திகார் சிறை மற்றும் அதன் கிளை சிறைகளில் கொரோனா தோற்று ஏற்பட்டிருந்தது. 

தற்போது 2 சிறைக்கைதிகள் மற்றும் 6 சிறை அதிகாரிகள் உட்பட 8 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 பேருக்கும் எந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. 

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல்நிலை சீராக இருக்கிறது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via