கணவர் இறந்த தூக்கம் தாங்காமல் பெண் தீக்குளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாளையங்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி இவரது மனைவி பேபி (57) கணவரை இழந்தவர், இவர் தனிமையில் கணவனை இழந்த துக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11-மணிக்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவரது உடல் முழுவதும் கரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :