திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

by Editor / 06-01-2022 11:03:22pm
திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 ஊரடங்கு நாளன்று போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது
எழுத்து தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு,ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 8ல் தேர்வு நடைபெறவுள்ளது. இதேபோல் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு ஜனவரி 9ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via