மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு...

by Admin / 02-09-2021 03:30:08pm
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு...

 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் .

கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது வெளிநாட்டில் இருக்கக்கூடிய அவர் அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ மற்றொரு வழக்கு சிபிசிஐடி பதிவு .
 
முன்னாள் மாணவியின் தாயாருக்கும் சிவசங்கர்  பாலியல் தொந்தரவு அளித்ததால்  இந்த புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  மூன்று போக்சோ  வழக்குகள் பதிவு செய்யப்பட்ட  நிலையில் தற்போது மேலும் இரண்டு வழக்குகள் சிவசங்கர்  மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via