பள்ளி வாகனம் மோதி சிறுமி துடிதுடித்து பலி

by Staff / 19-01-2024 12:44:20pm
பள்ளி வாகனம் மோதி சிறுமி துடிதுடித்து பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்தார். பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய போது, சக்கரத்தில் சிக்கி மாணவி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via