ஆதார் மற்றும் பான் இணைப்பு தேதி நீட்டிப்பு
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 31, 2022 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே ஆதார் மற்றும் பான் இணைப்புக்காக கெடு தேதி தொடர்ந்து கொரோனோ தொற்று பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு இந்த முறை நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடு தேதிக்குள் பான் கார்டை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதனை இணைக்க தவறினால் அவர்களது பான் கார்டு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்படி முடக்கப்படும் பான் கார்டை பயன்படுத்தினால் வருமானவரித்துறைக்கு ரூ.10ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்காதவர்கள் இந்த லிங்கை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம்.
அதே போல ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தவர்கள் அதனை பின்வரும் முறையின் கீழ் சரி பார்த்துக் கொள்ளலாம். www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற லிங்கை அணுக வேண்டும். அதில் பயனர்கள் தங்களது ஆதார் மாற்றும் பான் எண்ணைபதிவு செய்ய வேண்டும்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :