லிப்டில் 36யை சீண்டிய 68 கைது

by Editor / 23-01-2022 06:16:31pm
லிப்டில் 36யை சீண்டிய 68 கைது

லிப்டில் பெண் இன்ஜினியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

 லிப்டில் பெண் இன்ஜினியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு வர்த்துார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 36 வயது பெண் இன்ஜினியர் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.அந்த பெண் இன்ஜினியரின் வீடு 22வது மாடியில் உள்ளது.அந்த பெண் தரைதளத்தில் இருந்து மாடிக்கு 'லிப்ட்'டில் சென்று கொண்டு இருந்தார். அந்த லிப்ட்டில் உடன் வந்த சுபோத்குமார் சின்ஹா, 68, என்பவர் பெண் இன்ஜினியரை திடீரென கட்டிப்பிடித்தார். அதிர்ச்சி அடைந்த அவர், முதியவரை பிடித்து தள்ளி விட்டார். ஆனாலும் அந்த முதியவர், அவரின் உடல் பாகங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.வீட்டிற்கு சென்றதும் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து தன் கணவரிடம் கூறினார். இதையடுத்து வர்த்தூர் போலீஸ் நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். சுபோத்குமார் சின்ஹா கைது செய்யப்பட்டார்

 

Tags : 68 arrested for hitting 36 in the lift

Share via