கொரோனா பாதிப்பு : ரயில்வே  பாதுகாப்பு படை பெண் காவலர்கள் நடனம் 

by Editor / 30-06-2021 07:51:37pm
கொரோனா பாதிப்பு : ரயில்வே  பாதுகாப்பு படை பெண் காவலர்கள் நடனம் 



சென்னை சென்ட்ரவில் கொரோனா பாதிப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் நடனமாடிய காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம் முடக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி வைரலாகி வருகிறது. 
பட்டி தொட்டி எங்கும் பட்டை கிளப்பிய கூக்கு பாடலை விழிப்புணர்வுக்கு ஏற்கனவே கேரள போலீசார் பயன்படுத்திய நிலையில், தற்போது சென்னை ரயில்வே போலீசார் பயன்படுத்தியிருக்கின்றனர்.
காக்கி உடையில் இளம் பெண் காவலர்கள் முகக்கவசம் அணிந்து நடனமாட, அவர்களுக்கு பின்னால் கருப்பு உடையில் மற்றொரு பெண் காவலர் முகக்கவசம் அணியாமல் நடனத்தில் இணைந்தார். கொரோனா பிடியில் கருப்பு உடை பெண் காவலர் சிக்குவது போல தத்ரூபமாக நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி பொதுமக்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

 

Tags :

Share via