ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் 6 பேர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கார் மற்றும் லாரியில் கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.
திருப்பதி ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் மட்டும் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 145 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்ததை அடுத்து செம்மரக்கட்டைகள் உடன் சேர்த்து லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களுக்குள் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இரண்டு பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது
Tags :