வெற்றி துரைசாமி பற்றிய விவரங்கள் தேடுதல் நிலையிலேயே தொடர்கிறது.

by Admin / 08-02-2024 11:32:25am
வெற்றி துரைசாமி பற்றிய  விவரங்கள் தேடுதல் நிலையிலேயே தொடர்கிறது.

இமாச்சலப் பிரதேஷ் சட்லஜ் நதிக்கரையில் காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கார் விபத்தாகி நதியில் மூழ்கியது .இதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவரோடு சென்றிருந்த நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டார் .நேற்று ஒருநாள் தவிர்த்து நான்கு நாட்களாக தேசிய பேரிடர், துண ராணுவ அமைப்பினர், உள்ளூர் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பாறைகளுக்கு இடையில் இருந்த மனித மூளை டி.எ.ன்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய செல்போன் கண்டெடுக்கப்பட்டதோடு அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் சென்று வந்த காணொளி காட்சியும் வெளியிடப்பட்டது.. ட்ரோன் வழியாகவும் தேடவுள்ளதாகவும் தகவல். வெற்றி துரைசாமி பற்றிய முழுமையான விவரங்கள் தேடுதல் நிலையிலேயே தொடர்கிறது..தன் மகன் குறித்த தகவலை தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அண்மையில் சைதை துரைசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via