உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்

by Staff / 27-03-2022 04:01:45pm
உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்


கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார்கள்.
 
இந்த உணவகத்திற்கு நேற்று இரவு சிலர் சாப்பிட வந்தனர். உணவு உண்டபின்பு அவர்களுக்கும், உணவகம் நடத்திய பெண்களுக்கும் இடையே பிரச்சினை மூண்டது.

சிறிது நேரத்தில் தகராறு முற்றி மோதல் மூண்டது. உடனே அந்த கும்பலில் இருந்தவர்கள் உணவகம் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சனல்பாபு என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். இவர் பஸ் டிரைவர் ஆவார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்ட நபர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் முட்டம் பகுதியை சேர்ந்த பிலிப் என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். 

 

Tags :

Share via