நாக பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வனத்துறை பெண் அதிகாரி

by Admin / 08-02-2022 10:23:03am
 நாக பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வனத்துறை பெண் அதிகாரி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.  வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். 

ரோஷினி என்ற பெண் வனத்துறை அதிகாரி சற்றும் பயமின்றி பாம்பை லாவகமாக பிடித்து அசத்தினார்.

பல்லி, கரப்பான் பூச்சி போன்ற ஜந்துக்களுக்கு பெண்கள் பயந்த காலம் மாறி தற்போது நாகப்பாம்பையே அசால்ட்டாக பிடிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கை தையிரியம்  பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via