கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் அறிகுறிகள் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் 14 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா, கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு, ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 7 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
Tags : Heavy rain warning for 4 districts in Kerala