அதிமுக வேட்பாளர் மீது வழக்கு.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.இந்த அறிமுக கூட்டம் நடந்த பகுதியின் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது.இந்த பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை வரவேற்கும் வண்ணம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க செய்ததால் பள்ளி,மற்றும் அந்த பகுதியினர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்த சேலம் 58வது அதிமுக வேட்பாளர் பாண்டியன் மீது கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Tags : Case against AIADMK candidate.