பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளருக்கு பெண்குழந்தை பிறந்தது குடும்பத்தினர் மகிழ்ச்சி

by Editor / 17-02-2022 04:37:48pm
பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளருக்கு பெண்குழந்தை பிறந்தது குடும்பத்தினர்  மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரர், இவர் நிறைமாத கர்ப்பிணி பெண்.கடையநல்லூர் நகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தனது உறவினர்களோடு 16ஆம் தேதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அவருக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருடன் இருந்தவர்கள் அவரை கடையநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரசாரத்தின்போது வேட்பாளர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம்  கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் ரேவதி பாலிஸ்வரன் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக அவர் உறவினர்கள் தெரிவித்தனர்.  

பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளருக்கு பெண்குழந்தை பிறந்தது குடும்பத்தினர்  மகிழ்ச்சி
 

Tags :

Share via