ரயில் சேவைகள் முழுமையாக ரத்து.

by Editor / 24-03-2023 08:56:48am
ரயில் சேவைகள் முழுமையாக ரத்து.

திருவனந்தபுரம் கோட்ட பகுதியில் உள்ள மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இன்று (மார்ச் 24) நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயில் (16321) மற்றும் நாளை (மார்ச் 25) காலை 08.00 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - நாகர்கோவில் ரயில் (16322) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via