தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது 

by Editor / 07-09-2023 09:31:38pm
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது கொசு டெங்கு மலேரியா கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும் அது போன்று தான் சனாதனம் அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார். இதற்கு நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் தமிழக அமைச்சர் உதயநிதியை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்   அதன் அடிப்படையில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டங்களும் காவல்துறை  சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தமிழகத்தின்  மாவட்டதலைநகரங்களில்  கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது 
 

Tags : இந்து முன்னணி தடையை மீறி ஆர்ப்பாட்டம்.

Share via