அசம்பாவிதங்கள் நடந்தால் அதை சமாளிக்க கூடுதல் போலீசார் நியமனம்- தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்

by Editor / 19-02-2022 12:25:48am
அசம்பாவிதங்கள் நடந்தால் அதை சமாளிக்க கூடுதல் போலீசார் நியமனம்- தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்

 தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் தமிழ்நாடு போலீசார், 1.32 லட்சம் அலுவலர்கள் 
பணியமர்த்தபட்டுள்ளனர்.2.83 கோடி வாக்காளர்கள்  வாக்களிக்க உள்ளனர்.218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" 

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் இன்று  வாக்குப்பதிவு.
295 இடங்களுக்கு தேர்தல் இல்லை,தேர்தல் நாளில் சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்,எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதை சமாளிக்க கோவை நகரம் & கோவை மாவட்டத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இன்னமும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று சொல்ல முடியாது என  தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்தெரிவித்தார்.

 

Tags : local body elaction

Share via