இலத்தூர் சனீஸ்வரர் கோவில் சனி பெயர்ச்சி விழா நடந்தது

by Editor / 20-12-2023 09:39:27pm
இலத்தூர் சனீஸ்வரர் கோவில் சனி பெயர்ச்சி விழா நடந்தது

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயிலுக்கு உட்பட்ட இலத்தூர் அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத மது நாத சுவாமி சனீஸ்வரர் கோவிலில் வரும் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடந்தது கடந்த 17ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி வரை லட்சார்ச்சனை சிறப்பு தீபாரதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இன்று 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சனீஸ்வரருக்கு காயத்திரி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது கோவிலின் மூலவர்களான அறம் வளர்த்த நாயகி மதுநாத சுவாமி மற்றும் பரிவாரங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது அன்று இரவு 6 59 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார்  அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது  இரவு பத்து மணிக்கு சனீஸ்வர பகவான் பக்தி உலா சீரும் சிறப்புமாக நடந்தது.இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது. 

 

Tags : இலத்தூர் சனீஸ்வரர் கோவில் சனி பெயர்ச்சி விழா நடந்தது

Share via