காலில் விழுந்தவரை தடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

by Admin / 21-09-2021 11:53:50pm
காலில் விழுந்தவரை தடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்


 
சென்னை தலைமை செயலகத்தில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கும் போது காலில் விழுந்தவரை தடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ், ஆயிரத்து 597 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பயணாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது நலத்திட்ட உதவியை பெற வந்தவர் முதலமைச்சரின் காலில் விழுந்தார். உடனடியாக முதல்வர் தடுத்து, இதேபோல் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 

Tags :

Share via