நாளை 21 ஆம் தேதி 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு-மாநில தேர்தல் ஆணையம்.

by Editor / 20-02-2022 06:26:43pm
நாளை 21 ஆம் தேதி  5 வார்டுகளில்  மறுவாக்குப்பதிவு-மாநில தேர்தல் ஆணையம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த  சென்னை மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 179, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25,ஆகிய 5 வார்டுகளில்  உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை 21ஆம் தேதி மறுவாக்குப் பதிவு -தேர்தல் ஆணையம்.7 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்-மாநில தேர்தல் ஆணையம்.

 

Tags : Re-registration in 5 wards tomorrow-21st State Election Commission.

Share via