தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்

by Editor / 21-02-2022 10:29:25am
தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தேரோட்டத்தை  துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற  திருவெண்காடு (புதன்ஸ்தலம்) அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திர பெருவிழா 9 ஆம் நாள் திருவிழாவான தேர் திருவிழா துவங்கியது.தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.விநாயகர்,முருகன்,சுவேதாரண்யேஸ்வரர் ஆகிய மூன்று தேர்களின் வீதியுலா துவங்கியது. திராளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.

 

Tags :

Share via