நடிகர் அஜித் தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக ரூ.2.50 கோடியை அளித்துள்ளார்.

by Editor / 14-05-2021 10:52:24am
நடிகர் அஜித் தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக ரூ.2.50 கோடியை அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 2.50 கோடி அளித்துள்ளார் நடிகர் அஜித். வங்கிப் பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு ரூபாய் 2.50 கோடி நிதி அனுப்பியுள்ளார் நடிகர் அஜித்குமார்.ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூபாய் ஒரு கோடி தந்தனர்.அதேபோல் ஜிஆர்டி குழுமம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி, zoho கார்பொரேஷன் சார்பில் ரூ.5 கோடி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி என பலரும் நிவாரண தொகையை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via