பூனே மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பின் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்

by Admin / 06-03-2022 01:42:32pm
பூனே  மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பின் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணித்து மாணவியர் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.

புனேயில் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என இரு வழித்தடங்களில் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக கிழக்கு மேற்கு தடத்தில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயணச்சீட்டு வாங்கி கார்வார் கல்லூரி முதல் ஆனந்த்  நகர் வரை மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி அதே ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் பயணியிடம் கலந்துரையாடினார்.

முன்னதாகவே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்த விழாவில் மாநில ஆளுநர்  பகத் சிங் கோசியாரின்   பூனே  மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via