மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் மாணவர்கள் பலி

by Staff / 30-03-2024 02:59:10pm
மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் மாணவர்கள் பலி

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் ஜஸ்வந்த் (20), காளிதாஸ் (24) ஆகிய  மூன்றுபேரும் நேற்று  இரவு சின்னங்குடியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். அங்கிருந்து இன்று காலை மூன்றுபேரும்  ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் சிறுவன் மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளிதாஸ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via