தேர்தல் பறக்கும் படை சோதனையில் குட்கா பறிமுதல்

by Staff / 30-03-2024 03:06:30pm
தேர்தல் பறக்கும் படை சோதனையில் குட்கா பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த சிலர், அதிகாரிகளைப் பார்த்ததும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை ஆய்வு செய்தனர். அப்போது, 50 மூட்டைகள் குட்கா இருந்தது தெரியவந்தது. உடனடியாக குட்காவை மீட்ட அதிகாரிகள், காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காரின் எண்ணை வைத்து குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via