நேருக்கு நேர் மோத இருந்த இரண்டு விமானங்கள் விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி

by Admin / 08-03-2022 03:14:33pm
நேருக்கு நேர் மோத இருந்த இரண்டு விமானங்கள் விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி

நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த ஆபத்தான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் பெரும் விபத்தை தவிர்த்தனர்.

இந்த சம்பவத்தில் முதுகிலும் நெஞ்சிலும் பலத்த காயம் அடைந்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் தனி விமானம் வாரணசியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட போது எதிரில் வேறு ஒரு விமானம் வருவதை அறிந்த விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்தர்  மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஆனால் விமானம் திடீரென கீழ் நோக்கி சரிந்ததால் தூக்கி எறியப்பட்டு காயமடைந்ததாக மம்தா தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via