பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர வாய்ப்பு
பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 125 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை.
நேற்று உத்திரபிரதேசத்தின் கடைசிக் கட்ட தேர்தலுடன் தேர்தல் நிறைவு பெற்றது இதை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் என்னை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 139 டாலராக உயர்ந்து விட்டது இந்த நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.
இதனை ஓரளவு ஈடு செய்ய ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை விலை உயர்த்த மத்திய அரசு அனுமதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :