பெங்களூரில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த தம்பதி கைது

by Admin / 08-03-2022 03:33:43pm
பெங்களூரில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த தம்பதி கைது

கேரள மாநிலம் கண்ணூரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து போதை பொருளை எம்  டீ  எம் ஏ பறிமுதல் செய்யப்பட்டது பால்கிஸ்  மற்றும் அவருடைய கணவர் அப்சல் பெங்களூரில் இருந்து வந்த பேருந்தில் வந்ததாகவும் உடைகளில் போதைப்பொருள் மறைத்து வைத்து பேருந்தில் கடத்தி செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கண்ணுர் பிளாசா  சந்திப்பு அருகில் போதைப்பொருள் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கினார் கணவன் மணைவி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via