பேரறிவாளனுக்கு பிணை - நீதியானதும் முன்மாதிரியானதுமான தீர்ப்பு-பழ. நெடுமாறன் வரவேற்பு

by Editor / 09-03-2022 10:33:27pm
பேரறிவாளனுக்கு பிணை - நீதியானதும் முன்மாதிரியானதுமான தீர்ப்பு-பழ. நெடுமாறன் வரவேற்பு

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
30 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்யும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையை வரவேற்கிறேன்.பிணை கொடுக்கக் கூடாது என ஒன்றிய அரசு தரப்பில் மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டுகிறது. நீதியானதும் முன் மாதிரியானதுமான இத்தீர்ப்பை ஏற்று சிறையில் வாடும் மற்றுமுள்ள ஆறு பேர்களுக்கும் உடனடியாக அதே நீதி கிடைக்க ஆவன செய்து உதவுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : Bail for the great sage - righteous and exemplary judgment-fruit. Welcome to Nedumaran

Share via