ஹிஜாப் தீர்ப்பு விவகாரம் - நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக 3 பேர் மீது வழக்கு

by Editor / 19-03-2022 09:49:40am
ஹிஜாப் தீர்ப்பு விவகாரம் - நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக 3 பேர் மீது வழக்கு

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-03-22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாண்புமிகு. நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக,மாநிலதணிக்கை குழு உறுப்பினர்,கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர்,அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்றுபேர் மீது 5 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via