ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டது.
உக்ரேனில் மனிதநேயம் நிலவரம் குறித்து ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா சீனா உள்பட சில நாடுகள் வாக்களித்தன ஆனால் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
உக்ரேன் மனிதாபிமான நிதி திரட்டும் இந்த தீர்மானத்தில் ரஷ்யாவின் யுத்தத்தில் நேர்ந்த சேதங்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை என்பதால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
Tags :