வாகனங்கள் தொடர் விபத்து 2 பேர் பலி.

by Editor / 31-03-2022 08:06:58am
வாகனங்கள் தொடர் விபத்து 2 பேர் பலி.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முதனம்பட்டி விலக்கு  பகுதியில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கி வந்துக் கொண்டிருந்த டிராக்டர் மீது பின்னால் வந்த பால் வேன் மோதியதில் டிராக்டர் வலது புறமாக வேகமாக திரும்பி மற்றொரு காரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்த நாகராஜ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மேலும் டிராக்டரில் வந்த 4 பேர் படுகாயம்அடைந்தனர்.இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : accident

Share via