. என் மரணம் நான்குற்றமற்றவள் என்று உறுதிபடுத்தும்,

by Admin / 02-04-2022 12:30:37am
. என் மரணம் நான்குற்றமற்றவள் என்று உறுதிபடுத்தும்,

ராஜஸ்தானின் தவுசாவில் .  தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே அதற்கு காரணம்என்று பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். டாக்டா்  அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்தனா்   மார்ச்இறுதியில் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அர்ச்சனா எழுதிய  கடிதம் சமூக ஊடகங்களில் பரவி தவறாக  மருத்துவர் மீது வழக்கு பதிந்ததற்காக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு. மாவட்ட எஸ்.பி.,யைஇடமாற்றம்செய்து முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.தற்கொலைக்கு முன் அா்ச்சனா எழுதியகடிதத்தில் :என் கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.  எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. பிரசவத்தின் போது அதிக உதிரப்போக்கு என்பது அனைவரும் அறிந்ததே.. என் மரணம் நான்குற்றமற்றவள் என்று உறுதிபடுத்தும்,. மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள் என்ற வாசகம் குறிப்பிடபட்டிருந்தது  

 

Tags :

Share via