தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து ஒரு விசைப்படகை கைபற்றி சென்ற இலங்கை கடற்படையினர்.

by Editor / 03-04-2022 09:49:57am
தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து ஒரு விசைப்படகை கைபற்றி சென்ற இலங்கை கடற்படையினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  ஒரு விசைப்படகை கைபற்றியும்,மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.கடந்த சில மாதங்களாக  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்  கைதுசெய்யபட்டுவருவதால் மீனவர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு உரிய தீர்வுகாண வேண்டுமென  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : 12 fishermen arrested for fishing across the border

Share via